Sunday 30 January 2011

"வேள்வித் தீயில்..."

விடுதலை வேள்விக்கு....
உதிரத்தை நெய்யாக்கி
உணர்வினை திரியாக்கி
தன்னுயிர் சுடரில் ...
விடுதலை தீபம் ஏந்தி
விடிவென்னும் விளக்கேற்றிய

அத்தனை ஆன்மாக்களுக்கும்
இந்த தேசத்தை நேசிக்கும்
குடிமகன்களின் சார்பில்
தமிழ்க் காதலனின்........
தியாக வணக்கங்கள் சமர்ப்பணம்.

பெயர் தெரிந்த பெரியவர்கள் விடுத்து,
பெயர் தெரியா தேசத் தியாகிகளுக்கு
இந்த சமர்ப்பணம் முதலில் சேர வேண்டும்.


வாழ்க்கையின் மொத்தமும்
வாடி வதங்கிச் சிறையில்.......
சருகாகி சாம்பலான பேரான்மாக்களுக்கும்,
சத்தமில்லாமல் சருகாகிப் போன
சாமானியனுக்கும், அந்நியன் பிரம்புக்கும்
சட்ட வரம்புக்கும் உயிர் உதிர்த்திட்ட
சரித்திர உத்தமர்களுக்கும்..,
தியாகம் விதைத்து, தேசம் வளர்த்த
திருநாட்டின் மக்களுக்கும்,
குடிமகனாய் கடமையாற்றி
தேசியம் கட்டமைத்த பெரியோர்களுக்கும்
,
தியாகிகள் நினைவு நாளில்.....

திருவடிகளில்.......
தேசத்தின் சார்பாக...
மௌனத்தை அஞ்சலியாக்கி
மறுபடியும் சுதந்திர போராட்டம்

வெடிக்கும் இம்மண்ணில்.....
சுதந்திரம் மீட்டெடுக்க
உத்தமர்களை உருவாக்க

உறுதி பூணும் இந்நாளில்

தேசியம் காக்க..,
தோள் கொடுங்கள் தோழர்களே.....

தோழமையுடன்,
-தமிழ்க்காதலன்.

2 comments:

எஸ்.கே said...

அருமையான உணர்வுப்பூர்வ கவிதை!

'பரிவை' சே.குமார் said...

உணர்வுப்பூர்வ கவிதை.