Wednesday 15 December 2010

"தமிழ் வாழ்த்து...!"


காலத்தோடே ஞாலம் தழைக்கும் செந்தமிழே
காவலர் போற்றி வளர்த்த கன்னித் தமிழே        
நாவலர் புலவர் நாசெழிக்கும் நற்றமிழே
கம்பன் இளங்கோ திருமூலர் கடுந்தமிழே

குறுகத்தரித்த குறள் வாழும் வான்தமிழே
கங்கையில் குளித்து காவிரியில் செழித்து
வைகையில் வீற்றிருக்கும் சங்கத் தமிழே  
அலைகடல் மேவிநிற்கும் வங்கத் தமிழே

நின்னைத் தொழுதோம் நிலவுலகில் அன்னைத்தமிழே...!
நீடூழி வாழிய நீ யுகங்கோடி....!!    

                                                                                                        -தமிழ்க்காதலன்.

1 comment:

பனித்துளி சங்கர் said...

சிறப்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள் அருமை .பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள்