Sunday 30 January 2011

"ஒதுக்கப்படும் இந்தியன்...?"


நிலத்தில் பிறந்து நீரில் வாழும்
நிலநீர்
வாழ்வனவாய் எங்களின் வாழ்க்கை.

கலங்களிலும்
, கட்டுமரங்களிலும்

கழியும்
எங்கள் காலம்.


தோணியைக்
கொண்டு

தொப்புள்கொடி
வளர்க்கிறோம்.

தொலைதூர
கடலில்
வாழ்வைத் தேடி
தொலைந்து
போகிறோம்.

வறுமைக்கு
அஞ்சவில்லை....!

வளமைக்கு
பஞ்சமில்லை....!!


கரை
காணா கடலில்......
உப்புக்காற்றில் உயிர்த்திருக்கும்
எங்கள்
சுவாசம்.


"மீன்களைப்
பிடிக்கும் கருவாடாய் நாங்கள்"...

கசங்கித்தான்
போகிறோம்....

கண்கலங்கி
வாழ்கிறோம்.


எவர்
வாழ்விலும் நாங்கள் மண்ணை போட முடியாது.

தண்ணீரில்
வாழும் தவளைகள் நாங்கள்.

முதலைகளை
விட அதிக பயம் தரும்
எங்கள் முதலாளிகள்.

மனிதர்களாய்
கூட மதிக்காத
எங்கள்
தேசத்து மந்திரிகள்.


மரணத்தை
மடியில் கட்டிக் கொண்டு
கண்ணுக்குத் தெரியா ஆழ்கடலில் காத்திருக்கிறோம்.
வளையில்
சிக்கும் மீன்களுக்காய்...

................................................................
வசமாய்
சிக்குகிறோம்......
சிங்களவன்
வளையில்
மீன்களாய்
நாங்கள்.


துப்பாக்கி
தோட்டா தொட்டுப் பார்க்க பயம்.

தோட்டாக்களை
முத்தமிட்டே
கிழிக்கப்
படும்
எங்கள் உதடுகளில்
இன்னுமிருக்கிறது
இந்தியாவின் மீதான நம்பிக்கை ................................................
கடைசிப்
புன்னகையாய்...!!


சிறுமீன்
வலைவிழுமின் மீண்டும்
கடல் சேர்க்கும் எங்கள் கருணை....
ஏன் இல்லாமல் போனது இந்திய அரசுக்கு...?
வலைசிக்கிய
மீனாய் வாடும் எங்கள் வாழ்க்கை.


கடலில்
மிதக்கும் எங்கள் பிணங்களை

கடல்
தாய் கரைசேர்க்கும் பொறுப்பு
காணமுடியவில்லை இந்த அரசிடம்...

எவரும்
கண்டு கொள்ளா எச்சங்களா நாங்கள்....?

இந்திய
அரசாங்கத்தின் மிச்சங்களா நாங்கள்...?


கரைக்கும்
கடலுக்கும் இடையே கண்ணீர் சிந்தும் போதா
உதவிக்கரம் கேட்கிறோம்....?
செந்நீர்
சிந்தும் போதுதானே கேட்கிறோம்...


நிராயுதபாணியாய்
நிற்கும் வீரனை
கொல்லாதே என்கிறது யுத்ததர்மம்.
மீனவனை
கொல்லலாம் என எங்கேனுமுண்டோ...?!


எந்த தர்மமும் அறியா அதர்மம் அங்கே....
ஆழ்கடலில் இந்திய இறையாண்மையை விலை பேசுகிறது.

வயிற்றுப்
பிழைப்புக்கு வந்தவனை
வன்முறையாளன் என்கிறான் சிங்களன்.
வாய்மூடி
நிற்கிறாயே என் தேசமே..........??!!


வாய்மையே
வெல்லும்......?!

எங்கே
...? எப்போது...?

வந்தே
மாதரம்........!

வங்கக்கடல்
யார் சொந்தம்...?

ஜெய்
ஹிந்த்.........!

சாகும்
போது சொல்லிக்கொள்ளும்
தாரக
மந்திரமோ....!


வீரம்
விளைந்த என் தேசமே...........

சோரம்
போகும் புத்தி உனக்கெப்படி
சொந்தமானது.........?
பங்காளிக்கு
பந்தி வைக்கலாம் ....,- நீ

பகையாளிக்கல்லவா
பந்தி வைக்கிறாய்...!

முடிச்சிட்டவனுக்கு
முந்தி விரிக்கலாம்
முகமூடிக்கு விரிக்கலாமோ....?!

இந்தியாவின்
எல்லை தில்லி மட்டும்தான்....

பிரதமரின்
குடும்பத்துக்கு வேண்டியவர்கள் மட்டுமே இந்தியர்கள்
காங்கிரசுக்கு சொந்தமானவர்கள் மட்டுமே இந்தியாவின் வாரிசுகள்.

கடலுக்கு
சொந்தமான நாங்கள்.....
"எடுப்பார் கைப்பிள்ளை",- எங்களை
கண்டவனும் சுடலாம்.......
அவன்
வாய் சிவக்கும் வெற்றிலைக்கு சுண்ணாம்பாய்

எங்கள்
இரத்தம்....


கேளுங்கள்
இந்திய குடிமகன்களே...........

வருங்காலத்தில்
கடல்நீரின் நிறம் நீலமல்ல...!!
இரத்தச் சிவப்பு.

எழுதிக்கொள்ளுங்கள்
........

உங்கள்
பாடத்திட்டத்தில் ........

இந்தியாவில்
'மீனவன்' என்றொரு இனம் இருந்தது என்று....
இந்திய அரசின் கையாலாகத் தனத்தினால்
கடலுக்குள் காணாமல் போனவர்கள் என்று....

கடலும்
நிலமும் காப்பாற்றிய ஒரு இனம்
கவனிப்பாரற்று
கடலுக்குள் அழிந்து போனக்
கதையை
உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.

தமிழகத்துக்
கடற்கரைகளில்.....
இனி நண்டுகள் கூட நகராது.
தமிழகத்து மண்ணில் மனிதம் நேசிக்கும்
தலைவனை பெற்றெடுக்கும்
தமிழச்சிகள்
இல்லையோ....?


எங்கள்
சாபங்களை உங்களின் வரமென எண்ணாதீர்கள்...?


கணவனுக்காய்
கனவுகள் சுமந்து கரையில் காத்திருக்கும்
செம்படவச்சியாய் கொஞ்சம் சிந்தியுங்கள்....
வருவான்
.... வாழ்க்கைத் தருவான் என்கிற
நம்பிக்கையில்
........
துப்பாக்கித்
தோட்டாக்கள்
தின்று
தீர்த்த
மிச்சங்களை தராதீர்கள்.......
அவள் தாலிப் பறிக்காதீர்கள்...
கலங்கும்
கண்களுடன் கடல் நோக்கும்

பிஞ்சு
உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்...


ஓன்று
...........

நாங்கள்
இந்திய குடிமகன்கள் என்றால்......

நிரந்தரமாய்
ஒரு தீர்வுக்கு வாருங்கள்....
எங்களின்
நிம்மதிக்காய்......

திரைமறைவு
நாடகங்கள் வேண்டாம்.

தீர்க்கப்
பட வேண்டிய வாழ்க்கை இது.


மற்றொன்று
...........

எங்களை
"இந்தியாவின் குடிமகன் இல்லை" என்றறிவித்து விடுங்கள்.
உங்களிடமிருந்து "எங்களின் அடையாளங்களை" அழித்து விடுங்கள்.

சர்வதேச
சந்தையில் சாதாரணமாய் கிடைக்கிறதாம்.......

அத்தனை
ஆயுதங்களும்............


நாங்களே
பார்த்துக்கொள்கிறோம்....... சிங்களவனை

பார்த்துப்
பார்த்துக் கொல்கிறோம்.


எங்கள்
கைகளிலும் உரமிருக்கிறது.
எங்கள் நெஞ்சிலும் திமிரிருக்கிறது.

கடல் எங்களுக்கு அத்துபடி..!
காற்று
எங்கள் அத்தைமடி..!!

எங்கள்
கரங்களிலும், கட்டுமரங்களிலும்
ஏ.கே - 47.

இன்னும்
நவீன ஆயுதம் ஏந்தி மீன் பிடிப்போம்.


அப்போது
வீழ்வது தமிழனல்ல...

அப்போது
சாவது தமிழனல்ல...


எங்கள்
பிள்ளைகளுக்கு தோட்டாக்கள் வைத்து
கணக்குச் சொல்லிக்கொடுங்கள்.
துப்பாக்கி
நிறுத்தி தாண்டச் சொல்லுங்கள்.


எதற்கும்
உதவாத ஒரு இராணுவத்தை விட
உயிர்க் காக்கும் எங்கள் உறவுகள் மேல்....
எங்களை
நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.


முடிவெடுங்கள்
................


நாங்கள்
மடிந்து அழியும் முன்.......


உங்களின்
பதிலுக்காய்........


வாழ்வை எதிர்நோக்கி காத்திருக்கும்
மீனவனாய்............
-தமிழ்க்காதலன்.




"வேள்வித் தீயில்..."

விடுதலை வேள்விக்கு....
உதிரத்தை நெய்யாக்கி
உணர்வினை திரியாக்கி
தன்னுயிர் சுடரில் ...
விடுதலை தீபம் ஏந்தி
விடிவென்னும் விளக்கேற்றிய

அத்தனை ஆன்மாக்களுக்கும்
இந்த தேசத்தை நேசிக்கும்
குடிமகன்களின் சார்பில்
தமிழ்க் காதலனின்........
தியாக வணக்கங்கள் சமர்ப்பணம்.

பெயர் தெரிந்த பெரியவர்கள் விடுத்து,
பெயர் தெரியா தேசத் தியாகிகளுக்கு
இந்த சமர்ப்பணம் முதலில் சேர வேண்டும்.


வாழ்க்கையின் மொத்தமும்
வாடி வதங்கிச் சிறையில்.......
சருகாகி சாம்பலான பேரான்மாக்களுக்கும்,
சத்தமில்லாமல் சருகாகிப் போன
சாமானியனுக்கும், அந்நியன் பிரம்புக்கும்
சட்ட வரம்புக்கும் உயிர் உதிர்த்திட்ட
சரித்திர உத்தமர்களுக்கும்..,
தியாகம் விதைத்து, தேசம் வளர்த்த
திருநாட்டின் மக்களுக்கும்,
குடிமகனாய் கடமையாற்றி
தேசியம் கட்டமைத்த பெரியோர்களுக்கும்
,
தியாகிகள் நினைவு நாளில்.....

திருவடிகளில்.......
தேசத்தின் சார்பாக...
மௌனத்தை அஞ்சலியாக்கி
மறுபடியும் சுதந்திர போராட்டம்

வெடிக்கும் இம்மண்ணில்.....
சுதந்திரம் மீட்டெடுக்க
உத்தமர்களை உருவாக்க

உறுதி பூணும் இந்நாளில்

தேசியம் காக்க..,
தோள் கொடுங்கள் தோழர்களே.....

தோழமையுடன்,
-தமிழ்க்காதலன்.

Tuesday 25 January 2011

"குடியரசு...!"

எட்டிப் பழுத்தாலென்ன..? ஈயாதார் வாழ்ந்தாலென்ன..?
எத்திப் பிழைத்தாலென்ன..? ஏமாற்றித் திரிந்தாலென்ன..?
தட்டி பறித்தாலென்ன..? தானாய் விழுந்தாலென்ன..?
சட்டி உடைந்தாலென்ன..? சடலம் பிழைத்தாலென்ன..?
சான்றோர் அழிந்தாலென்ன..? மாண்டோர் மீண்டாலென்ன..?
நல்லோர் ஒழிந்தாலென்ன..? அல்லோர் மெலிந்தாலென்ன..?
குடிசை எரிந்தாலென்ன..? குடும்பம் கலைந்தாலென்ன..?
குடிப் பெயர்ந்தாலென்ன..? குடிமக்கள் நலிந்தாலென்ன..?
கொள்கை மறந்தாலென்ன..? கூட்டு சேர்ந்தாலென்ன..?
கொள்ளை அடித்தாலென்ன..? பங்கு வைத்தாலென்ன..?
கொடநாடு வாழ்ந்தாலென்ன..? கோபாலபுரம் கொழுத்தாலென்ன..?
வடநாடு செழித்தாலென்ன..? தென்னாடு தேய்ந்தாலென்ன..?
தேர்தல் வந்தாலென்ன..? தேர்ந்து எடுத்தாலென்ன..?

குடிகள் இல்லாவிடத்து குடியரசு இருந்தென்ன..?

மாறாத மக்கள் வாழும் வரை தீராத துன்பம் தொடரும். நமக்கு இதுதான் கிடைத்த வரம். நமக்கு குடியரசு தினம்.
குழந்தைக்கு 'கொடி'யரசு தினம். மிட்டாய்களுக்காக மட்டுமே காத்திருக்கும் ஒரு சமூகம் இந்த கொண்டாட்டத்தில் என்ன கண்டுவிடப் போகிறது..?


தேசியம், தேசியப் பற்று கிஞ்சித்தும் பேசப்படாத நம் பள்ளிகள் நம் தலைமுறைகளுக்கு இழைக்கும் தேசத்துரோகம் கொஞ்சநஞ்சமல்ல. நமக்கு நுனிநாக்கு ஆங்கிலம் முக்கியம். பை நிறைய பணம் முக்கியம். அதை செய்யும் எதுவும் இங்கே சரியான பாதை. அதை எட்டுவதே நமது அன்றாட கொள்கை.

நாம் கடந்து வந்த பாதைகள்... நமக்கு முக்கியமில்லை. நாம் நடந்து சென்ற வீதிகள் நமக்கு பெரிதில்லை. முன்னோரின் வாழ்க்கைத் தந்த அனுபவ பாடம் நமக்கு அனாவசியம். பாரம்பரிய பண்பாடு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள். ஒரு சமூகம் கட்டி எழுப்பப் படும் அடிப்படை கட்டமைப்புகளில் சரிவுகள் ஏற்படும் போது அதில் நமக்கு பங்கில்லை.

சக மனிதன் மரணம் நமக்கு துன்பமில்லை. இன்னொருவன் துயரம் நமக்கு வரவே வராது. நாம் மட்டும் எல்லா சுகங்களும் அடைய வேண்டும். அதற்கான எல்லாவற்றையும் செய்ய அனுமதித்தலே சுதந்திரம். அப்படி செய்யப் படுகிறதா என்பதை பார்த்து பராமரித்தாலே குடியரசு. பாராளுமன்றம் "பள்ளி"யறையாய் மாறினாலும், பலநாள் மூடிக்கிடந்தாலும் நமக்கு அது பற்றி ஏதும் பொறுப்பு இல்லை. அதற்கு ஒபாமா வந்து முரசு கொட்டி உங்க பாராளுமன்றம் மூடிக்கிடக்கு திறந்து வைக்க நான் வருகிறேன்.... வாருங்கள் என்கிற அழைப்பு வந்தால்தான் நமக்கு ஒரு விழிப்பு வரும். சீனாவின் சில்லரைத்தனங்களை முளையில் கிள்ளாமல் வளர விட்டு, வேரோட விட்டு, பின்பு வெட்டும் கோடரியை தேடுவோம்... அல்லது வெளிநாட்டில் கோடரி செய்யச்சொல்லி விலை பேசுவோம். அதிலும் பேரம் பேசி ஊழலில் திளைப்போம்.

இப்படியாக வாழ்ந்து பழக்கப் பட்ட நமக்கு இன்று ஒரு மகத்தான குடியரசு நாள். இந்த நந்நாளில் நாம் சிந்திக்க, நாம் சந்திக்க, நாம் சாதிக்க, எதுவுமே இல்லை.

வாருங்கள் பதிவுலக நண்பர்களே............................

நமக்கு மதுப்புட்டி காத்திருக்கிறது. கிளப்புகள் வெறிச்சோடி கிடக்கின்றன. குத்தாட்ட அழகிகள் காசுக்கு காத்திருக்கிறார்கள். கடற்கரை காற்று நம்மை காணாமல் வறண்டு வீசுகிறது. நமக்கு எவ்வளவோ வேலைகள்.?
கிடைத்திருக்கும் இந்த ஒரு நாள் உபரி விடுமுறையை கொண்டாடாமல் போனால் நம் குலதெய்வம் நம் கண்களை குத்தும். புறப்படுங்கள்.....................

"குடியரசு என்றால் என்ன...? குடிமக்கள் என்பார் யார்..? எதற்காக ஒரு அரசு குடியரசாக இருக்க வேண்டும்..?"

ஐயா, பதிவுலக பெருமக்களே..................

யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க.......................

வருத்தமுடன்...
தமிழ்க்காதலன்.

Saturday 8 January 2011

"இப்படியே போனால்"...


என்னங்க எல்லாரும் நலமா இருக்கீங்களா..? நாம இனியும் தொடர்ந்து நலமா இருப்போமா..? என்னாச்சு...? ஏன் இப்படி கேக்குறீங்க..? அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது. விசயம் இருக்குங்க... சும்மா சொல்வோமா.

கடந்த பாராளுமன்ற தேர்தல்ல வெற்றிப் பெற்று பெரும்பான்மை இல்லாம கூட்டணி கொலை நிகழ்த்தி சனநாயகம் கொன்று ஆட்சி பிடித்த தனிப் பெரும் கட்சிதாங்க நம்ம காங்கிரசு கட்சி. விளைவு என்ன...? தனிச்சி தன்னிச்சையா எந்த முடிவும் எடுக்க முடியாம, திக்கித் திணறி அரசியல்ல மூச்சி விட்டுக் கொண்டிருக்கிற காங்கிரசு எப்படியாவது தன்னை தக்க வைக்கும் முயற்சியில பல முடிவுகளை எடுத்தது.

அவர்களின் அவசரங்களில் விளைந்த அசிங்கங்கள்....

* உலக பொருளாதார மயமாக்கல்...
* அத்தியாவசிய உணவுப் பொருள்களின் ஆன் லைன் வர்த்தகம்...
* ஏற்றுமதிக் கொள்கையிலும், இறக்குமதி கொள்கையிலும் செய்த தத்து
பித்து மாற்றங்கள்...
* அமெரிக்காவின் கைக்கூலியாய் இந்தியாவை ஆட்டிப் படைப்பது....
* நல்ல நிதியமைச்சர் என்று பெயரெடுத்த "அப்பாவி அறிவு சீவியை", "மோசமான பாரத பிரதமர்" என மாற்றி காட்டியது.
* கட்சியின் அதிகார வரம்புகள் பிரதமரை கட்டுப் படுத்துவது, அரசு கொள்கைகளில் தனக்கு சாதகமானமுடிவுகளை மட்டும் எடுப்பது.
* விலையேற்றத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காலம் கடந்து பொது மக்கள், பத்திரிகைகள் சுட்டிக்காட்டி குட்டிய பின் விழித்துக் கொண்டு, கண் கெட்ட பின் சூரியனை வணங்குவது.....

இப்படியாக இந்த தவறான அரசியல் கொள்கையுடைய அரசினால் நாமும் தேசமும் நாறிக் கொண்டிருக்கிறோம்.

இங்கே
மொத்த மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களும்தான் அதிகம். மேல்தட்டு மக்கள் குறைவு. ஆனால் மேல்தட்டு மக்கள்தான் நம்முடைய அரசை ஆட்டி வைக்கிறார்கள். பொதுமக்களால் எந்த அரசு அதிகாரியையோ, அரசியல் வாதியையோ தட்டிக் கேட்க முடிவதில்லை.

வருத்தத்துக்குரிய, வெட்க கேடான விசயம் ஒன்று, நம் தேசத்தின் உன்னதமான பாராளுமன்ற நேரத்தை நம் அரசியல் வாதிகளுக்கு பயன் படுத்த தெரியவில்லை. நம்முடைய விலை மதிக்க முடியா பொன்னான நேரம் எப்படி வீணடிக்கப் படுகிறது என்பதை நம்முடைய பாராளுமன்ற நிகழ்வுகள் பார்த்தால் தெரியும்.

அடுத்து நாம் தேர்ந்தேடுக்கும் பாராளுமன்ற எம்.பிக்கள் பாதிக்கு மேல் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. பேசத் தெரிவதில்லை என்பதும் ஒரு பக்க உண்மை. இன்னொரு உண்மை மக்களின் அடிப்படை பிரச்சனைகள் என்ன என்பது தெரியாமல் இருப்பதும் ஒரு காரணம். நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலட்சியம் அப்படியே பாராளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. நமக்கு தலைவர்கள் மட்டும் சரி இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம்முடைய குடிமகன்கள் சரி இல்லை என்பது மறுக்க முடியா உண்மையாய் இருக்கிறது.

உரிமைகள் கேட்க உரிமை உள்ளவனுக்கு, கடமைகள் செய்யும் பொறுப்பும் காத்திருக்கிறது என்பதை அறியா மக்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்து சில விசயங்களில் நம்முடைய இரட்டைத் தன்மைகள் நம்மை உலக அரங்கில் முடிவெடுக்கும் திறமை அற்றவர்களாகத்தான் நம்மைக் காட்டுகிறது. நம்முடைய இளைய சமுதாயம் அளப்பரிய ஆற்றல் பெற்றிருக்கிறது என்று யாரோ முனகும் சப்தம் கேட்கிறது. உண்மைதான். இளைஞர்களின் ஆற்றல் எங்கு பயன்படுகிறது...? நம்முடைய தேசத்திலா..? தேச வளர்ச்சிக்கா..? இல்லையே.. அவர்களின் திறமையை வளர்ந்த நாடுகள் பணத்தால் எடைப் போட்டு வாங்கி கொள்கிறார்கள். நம் அறிவிலும், நம் உழைப்பிலும் அவர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்கள்.

நாம் அன்றிலிருந்து இன்று வரை நம் தேசத்தை காட்டிக் கொடுப்பவர்களாகவும்... சுய ஆதாயம் அடையும் குணமும் மாறாதவர்களாகத்தான் இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமையாக்க பயன்படுத்திய இராணுவ வீரர்கள் நம்முடைய இந்தியர்கள். நம்மைக் கொண்டே நம்மை அழித்து நம்மை வைத்தே நம்மை அடிமையாக்கினார்கள். இப்படி செய்வது மாபெரும் துரோகம் என்கிற அறிவு கூட இல்லாமல் சுயநலம் நம்மவர்களை உந்தித் தள்ளி இருக்கிறது.

சரி... இன்றைய தலையாய பிரச்சனையாய் விலைவாசி ஏற்றம் இருக்கிறது. ஒரு கிலோ ஆப்பிளை விட "வெங்காயம்" விலை அதிகம். ஒரு லிட்டர் பாலை விட ஒரு கிலோ "தக்காளி" விலை அதிகம். ஒட்டுமொத்த காய்கறியும், பழங்களும், விலை ஏறிப் போய் இருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்றாற்போல் நம்முடைய வருமானம் இங்கே ஏற்றம் காணவில்லை. இன்னும் இங்கே மாத வருமானம் ரூபாய். 2000 /- தாண்டாதவர்கள் 39 % பேர் இருக்கிறார்கள். அரசு நேரடி அரசாங்க ஊழியர்களான ஆசிரியப் பெருமக்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை வழங்கி இருக்கிறது. ஒரு அரசாங்க ஆசிரியரை விட தனியாரில் வேலைப் பார்க்கும் ஆசிரியர்கள் அதிகம் வேலைப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் மாத வருமானம் வெறும் ரூபாய் 4000 முதல் 6000 வரைதான்.

இந்த நிலை ஏன்...? இவர்களின் வாழ்க்கை ஒரு கூலித் தொழிலாளியை விட மோசமானது. தனியார் ஆசிரியர்களை நம்பித்தான் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு உள்ள அரசாங்க ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் அதி மேதாவிகளாய் தங்களை காட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். பொதுவாய் ஒரு பள்ளி ஒரு ஆசிரியரை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய அளவை கூட ஒரு அரசாங்கத்தால் நிர்ணயிக்க முடியவில்லை என்றால் இங்கே என்ன சனநாயகத்தை இவர்கள் கட்டி காக்கிறார்கள்..? ஒருவருக்கு ரூபாய். 18000 ம் சம்பளமும், அதே வேளை செய்யும் மற்றொருவருக்கு ரூபாய்.6000 சம்பளம் என்றால் எப்படி இது சனநாயகம் ஆகும். அவர்களின் வாழ்க்கை எப்படி உயரும்...?
பொதுத் தன்மை இல்லாத கொள்கைகள்... எல்லோருக்கும் சமமான பொருளாதார முன்னேற்றம், கல்வி, ஏன் நம்மால் வழங்க முடியவில்லை. ஒரே காரணம்.... நம்மிடம் பொது நோக்கமில்லை. மனம் இல்லை. மற்றவர்களின் தாழ்மையிலும், ஏழ்மையிலும் நம்மை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ள நினைக்கிறோமே தவிர மனிதர்களை சமமாய் பாவிக்கும் மனோ பக்குவம் இல்லாத குணத்தால் நாம் இன்னும் இழிவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோம்.

நாம் நலமாயிருக்க நம்முடைய அயலானும் நலமாய் இருக்க வேண்டும்....

இனியேனும் அதை செய்வோமா...?

ஏக்கத்துடன்...
-தமிழ்க்காதலன்.

Wednesday 5 January 2011

"இளைஞர் பட்டாளம்"....!!!

சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மாநாடு சென்னை அறிவாலயத்தில் குதூகலமாய் குழப்பங்களுடன் நடந்து முடிந்தது...

இதில் அவர்கள் கட்சியின் "உள்குத்துகள்" பற்றி பல விசயங்கள் பேசப்பட்டன. நிறைய சோகக் கதைகள், அழுகைகள், புலம்பல்கள்..... ஆனால் எல்லோரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாய் பேசினார்கள்... என்ன விஷயம் என்கிறீர்களா....? சொல்கிறேன்.

"அனைத்து மாவட்ட, வட்ட, ஊராட்சி, தலைவர்களும் அவர்களுக்கு மேலிருக்கும் தலைவர்களை வெளிப்படையாய் குறை சொல்லி அழுததும்.., மாவட்ட நிர்வாகிகள் அமைச்சர்களை குறை சொல்லிப் புலம்பியதும் ஏகோபித்த காட்சியாய் காண முடிந்தது".

அவர்களின் குறை என்ன தெரியுமா..? நாங்கள் சம்பாதிக்க முடியவில்லை. நாலு காசுப் பார்க்க முடியவில்லை. இப்போ காசுப் பார்த்தாதானே உண்டு.... எங்க பொழப்பில் அமைச்சர் மண்ணை அள்ளிப் போட்டுட்டார் அமைச்சர். அவங்க சொந்தக்காரங்களுக்கு மட்டும்தான் காண்ட்ராக்ட் குடுக்குறார். கட்சிக் காரங்களுக்கு குடுக்க மாட்டேங்குறார். எல்லோரும் வெறுப்பா இருக்காங்க. இப்படி இருந்தா அடுத்த தேர்தல்ல அவங்க ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க.

இப்படிதாங்க ஒவ்வொரு கூட்ட சந்திப்பிலும் முதல்வர், ஸ்டாலின் உட்பட அத்தனை பேரின் முன்னிலையில் உட்கட்சிப் பூசல்கள் அலசப்பட்டன. ஒரு கட்சி எப்படி மக்களுக்கு தொண்டு செய்யலாம்... மக்களின் உண்மையானப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்.? நம்முடைய திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேருகிறது..? மக்களுக்கு அதில் திருப்தியா..? என்பது போன்ற எந்த விசயங்களும் அலசப் படவில்லை.

ஓட்டு மொத்த மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்தும் சுயநலமாய் சம்பாதிப்பது எப்படி என்கிற ஏக்கம்தான் மேலோங்கி இருக்கிறது. அடுத்த தேர்தலில் சீட் யாருக்கு கொடுக்க வேண்டும் என்கிற விண்ணப்பங்கள் வேறு.

இதில் மிகப் பெரிய வேதனை என்னவென்றால்.... முதல்வரும்.... இதை ரசித்தப் படி ஒட்டு மொத்தமாய் ஒரே பதிலை சொல்லி இருக்கிறார். அது பின் வருமாறு.

"நீங்கள் எல்லோரும் இப்படி சண்டைப் போட்டுக்கொண்டும், தனித் தனியாக செயல்பட்டுக் கொண்டும் இருந்தால் நாம் தேர்தலில் எப்படி வெற்றிப் பெறுவது..? நீங்கள் முதலில் ஒன்று படுங்கள்... உங்களில் இருக்கும் பகைமை உணர்ச்சிகள் மறந்து ஒற்றுமையாய் தேர்தல் வேலையை தொடங்குங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.... மக்கள் தி.மு. வுக்கு வாக்களிப்பார்கள்... நீங்கள் அதைக் கெடுத்துவிடாதீர்கள்.

இந்த தேர்தலில் நாம் வெற்றிப் பெற்றாலும், தோற்றாலும் எனக்கு ஒன்றும் பாதிப்பு வந்து விடாது. ஆனால் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.... உங்களின் உழைப்பை பொறுத்து நமது வெற்றி அமையும். எனவே ஒன்று பட்டு வெற்றிப் பெறுவோம். உங்களின் இந்த சின்ன சின்ன குறைகளை எல்லாம் சரி செய்து விடலாம். சென்று வாருங்கள்".

இதுதாங்க நம்ம முதல்வரோட வழிகாட்டுதல்.... அறிவுரை... எல்லாம்.

ஒட்டு மொத்த கட்சியும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதில் குறியாய் இருப்பதை பார்த்தால் இந்திய இருப்பு பெட்டியை காலி செய்தாலும் இவர்களின் ஆசை அடங்காது போல் தெரிகிறது. மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காத காட்சிகளில் தி.மு. முதலிடத்தில் இருக்கிறது. கேட்டால்... நானே இன்னும் இளைஞனாகத்தான் இருக்கிறேன் என்கிறார் முதல்வர்... அப்படி அவரை இளைஞராக வைத்திருப்பது அன்பழக இளைஞர் என்கிறார். ஸ்டாலின் இன்னும் இளைஞராக இருக்கிறார். எனக்கு ஒன்னு விளங்கலைங்க...

இவங்களை இளைஞர்கள் என்று வைத்துக் கொண்டால்......

நம்மை எந்தப் பருவத்தில் வைப்பது எனத் தெரியலங்க...? உங்களுக்கு விளங்குதா..?

நான் எல்லாம் பால் குடிக்கும் குழந்தைங்க...? நம்ம தினேஷ் குமார், மனசு குமார், வினோத் நிலா இவங்களும் பால் குடிக்கும் குழந்தைகள்.., அல்லது தத்தி தவழும் கைக்குழந்தைகள் எனக் கொள்ளலாமா...?

வலைப்பூவில் வாழும் அன்பு சொந்தங்கள் எல்லாம் குழந்தைப் பருவம் தாண்டா குழந்தைகள். வலைப்பூவில் குழந்தைகள் எழுதுகின்றன. தமிழகத்தில் தாத்தாக்களே கிடையாது. பாட்டிகள் இல்லவே இல்லை. எல்லாம் அக்காக்களோடு சரி....

இது ஆரோக்கியமான சமூகமா..? இதற்கு மாற்றுக் கிடையாதா...? அரிதாரம் பூசாத அரசியல் வாதிகள் நம்மில் உருவாகாதது ஏன்..? அல்லது உருவாக்கப் படாதது ஏன்..?

சென்ற தமிழகத் தேர்தலின் வேட்பாளர் சொத்து விபரப்படி, நம்ம இளைஞர் ஸ்டாலினுக்கு சொந்தமா ஒரு கார் கூட கிடையாது. ........என்னாச்சு மனசு குமார்...? மயக்கம் போட்டுடீங்க.... அங்க பாருங்க தினேஷ் குமார் இரத்த வாந்தி எடுக்கிறார். வினோத் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுறார்.... பிடிங்க அவரை...

ஆமாங்க... முதல்வருக்கு இன்றைய தேதிக்கு சொந்தமா வீடே கிடையாது... தெரியுமா உங்களுக்கு...? கொஞ்சம் இருங்க ஏதோ சத்தம் கேட்குது என்னனு பார்த்துட்டு வரேன்.... அட நம்ம சித்ராக்கா... என்னாச்சு இப்படி ஓடியாராங்க.. பின்னாடியே பார்த்தா ஒரு கும்பலே வருதுப்பா.....கௌசல்யா...ஆனந்தி, மீனா, சுபத்ரா, பத்மா, எல்லாரும் தலைதெறிக்க ஓடியாராங்க...... என்னன்னு கேட்டா.... முதல்வருகிட்ட பெட்டி (திருத்தம்) பேட்டி எடுக்கணுமாம்...

இந்த தேர்தலுக்கு ஓட்டுப் போட வரமாட்டேன்னு சிரிக்கறாங்க சித்ராக்கா.., அட அங்க யாரு... கே.ஆர்.பி செந்தில் உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்காராம்... மணிஜிய கூப்பிட்டு அவரோட உண்ணாவிரதம் முடிக்க சொல்லுங்கப்பா...

இதுக்கே இப்படின்னா இன்னும் இருக்கே.... என்ன பண்ண போறீங்க...?

அடுத்த முறை அதிர்ச்சித் தகவல்களோட உங்களை சந்திக்கிறேன்....

மீளாத அதிர்ச்சியுடன்.....
-தமிழ்க்காதலன்.
***********************************************************************

Monday 3 January 2011

"ஒன்னும் விளங்கலைங்க"...



அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய வலைப்பூ உள்ளங்களுக்கு தமிழ்க்காதலனின் வணக்கங்கள்.

எனக்கு சில விசயங்களில் சந்தேகங்களும், சில விசயங்கள் சுத்தமா புரியாததாகவும் இருக்குங்க... உங்களில் யாருக்காவது இதுல (சரியான) பதில் தெரிஞ்சா தயவுசெய்து எனக்கு பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்...

முதலில் புரியாத விசயங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுக்க "இறையாண்மை" அப்படின்னு ஒரு வார்த்தை அடிபடுதுங்க.... அப்படின்னா என்னாங்க..? அதிலும் குறிப்பா "இந்திய இறையாண்மை" அப்படின்னா என்னங்க...?

நம்ம நாட்டுல அடிக்கடி "கொள்கை" பற்றிய பிரச்சாரங்கள் நடக்குது... "கொள்கை" அப்படின்னா என்னங்க..? அதிலும் குறிப்பா "அரசியல் கட்சிகளின் கொள்கை" சுத்தமா விளங்கலங்க... தெரிஞ்சா சொல்லுங்க.... நானும் இதுக்காக சில பொதுக்கூட்டத்துல கூட கலந்துகிட்டுப் பார்த்துட்டேன்.... யாரும் அதைப் பத்தி பேசலைங்க.... உங்களுக்கு ஏதாவது புடிபடுதான்னு பாருங்க...

"இரகசியகாப்பு உறுதிமொழி" அப்படின்னா என்னங்க....? இத எதுக்கு அரசியல்வாதிங்க எடுக்குறாங்க....? இரகசிய கோப்புகளை கடத்துவதாங்க...? இல்லை திருடுவதாங்க....? விளங்கையில்ல....

"இராணுவ இரகசியம்" அப்படின்னா என்னங்க....? நம்மகிட்ட என்னென்ன ஆயுதம் இருக்குன்னு நம்மோட எதிரிக்கு உளவு சொல்றதாங்க... புரியல்ல.... புரிஞ்சா சொல்லுங்கோ....

நம்ம நாட்டுல அரசியல் சாசன சட்டப்படி "அதிக அதிகாரம்" யாருக்குங்க இருக்கு ....? சமீபத்திய பிரணாப் முகர்சியோட பேட்டிகளைப் பார்த்து நான் படிச்சதெல்லாம் மறந்து போச்சுங்க... நீங்க சொல்லுங்க...

"இலஞ்சம், ஊழல், திருட்டு" இது மூணுக்கும் என்னங்க வித்தியாசம்....? செயலைப் பொறுத்து பொருள் கொள்வதா..? இல்லை செய்யும் ஆளைப பொறுத்து பொருள் கொள்வதா..? புரியலைங்க.....

சின்ன வழக்கானாலும், பெரிய வழக்கானாலும் எல்லாத்துக்கும் நம்ம நீதிமன்றங்கள் "காலம் கடந்த தீர்ப்பு" வழங்கும்.... இரகசியம் என்ன...? வரப்பு தகராறுன்னு வந்தவங்க "வயலே இல்லாம போற" நிலைமை என்ன நியாமுங்க....?

இந்த வக்கீல்... மருத்துவர்களுக்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை சேவைக் கட்டணமா ஏன் சரியா தீர்மானிக்காமல் வச்சிருக்காங்க... (புடுங்கறதுக்கு வசதியாவா...) நாடு முழுக்க ஒரு சமச்சீரான கட்டணத்தை தீர்மானிக்கலாமே...

படிப்பறிவில்லாதவங்ககிட்டையும்... அறியாமை நிறைந்த அப்பாவிகளிடமும் கொள்ளை அடிக்க எதுக்குங்க கல்வி..கற்க வேண்டும்..? கல்வி என்பது "நாகரிகமாய் திருடுவதன் சாகசப் பயிற்சியாங்க"... இந்த நாடு முழுக்க படிச்சவன் பண்ற லொள்ளுத் தாங்க முடியலைங்க.....

நாகரிகமில்லா நடத்தையுள்ளவன் எப்படி கல்வியாளன் ஆகிறான்...?

சட்டப்படி இரண்டாம் திருமணம் குற்றமா...? இல்லை... முதல் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் இரண்டாம் திருமணம் செய்வது குற்றமா...? சம்மதத்துடன் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாமா...?


இந்து எனப் பிறப்பு சான்றிதழ் பெற்ற ஒருவன் ஒரு முகமதிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் அவன் சட்டப்படி முகமதியனாகிறான் என்றால்.... முகமதிய சட்டப்படி அவன் எத்தனை திருமணம் செய்தாலும் சட்டம் அதை சரி என்கிற போது.... அல்லது அவர்கள் மதப்படி "தலாக்" சொல்லி பிரிந்தால் அது "திருமணரத்து" என சட்டம் ஏற்றுக்கொள்கிறபோது.... இரண்டாவது திருமணம் தவறு அல்லது குற்றம் என்கிற சட்டம் செத்துப் போகும் மர்மம் என்ன....?

ஒருவனுடைய மனைவிக்குப்பின், அவனுடைய வாரிசுகளுக்குப் பின், அவனுடைய "வைப்பாட்டி" யாக இருப்பவருக்கு சொத்தில் உரிமை கொண்டாட உரிமை வழங்கும் இந்திய சட்டம் ஏன் அந்த வைப்பாட்டிகளின் வாழ்க்கைக்கு ஒரு அங்கீகாரம் அளிப்பதில்லை..? உங்களுக்கு விளங்குதாங்க.....

ஒரு "நாடு" என்பதன் பொருள் என்ன...? எதை நாம் "நாடு" எனக் கொள்ளலாம்...? வரையறுக்க முடிந்தால் சொல்லுங்கள்...

"சுயாட்சி" என்பது என்ன...? சுதந்திரம் என்பது என்ன...? நேற்றைய ஆங்கிலேய பிரபுத்துவ ஆட்சி முறைக்கும்... இன்றைய இந்திய மத்திய, மாநில ஆட்சி முறைக்கும் என்னங்க வித்தியாசம்...? இரண்டும் ஒன்னுதான்னா நாம சுதந்திரம் பெற்றது.... உண்மையா..? பொய்யா...?

சரிங்க..... விளங்காத விசயங்கள் நீளுவதால்..... உள்ளுக்குள் ஒரு போர் மூளுவதால்.... இப்போதைக்கு இதை நிறுத்துகிறேன்...... சந்தேகங்களை நாளை பார்ப்போம்...




என்னங்க
மறக்காம கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க...

பதிலுக்காய் காத்திருக்கும்
-தமிழ்க்காதலன்.